Saturday, September 7, 2013

லலித்மோடி மீது 8 புகார்கள் நிரூபணம்

பல்வேறு நிதிமுறைகேடுகளில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மீதான புகார் குறித்து ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி உறுப்பினர்கள் விசாரணை நடத்தி 134 பக்க அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர். 

அதில், இண்டர்நெட் உரிமம் வழங்கியதில் முறைகேடு, கொச்சி அணியின் பங்குதாரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குறித்த தகவலை பேஸ்புக்கில் கசிய விட்டது, இங்கிலாந்து கிளப்புடன் இணைந்து ஐ.பி.எல்.போட்டிக்கு எதிராக ஒரு லீக் போட்டியை நடத்த முயற்சித்தது, 

ஐ.பி.எல். அணிகளில் பினாமி பெயரில் பங்குகள் வைத்து இருந்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான டெண்டர் விஷயத்தில் சலுகை காட்டியது உள்பட 8 புகார்களில் லலித்மோடி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அறிக்கை மீது வருகிற 25-ந்தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்க உள்ளது. அவருக்கு ஆயுட் கால தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment