Saturday, September 7, 2013

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய அணி அறிவிப்பு


ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 22 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷீல் குமார், அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆனால், அவர் காயத்தால் அவதிப்ப
ட்டு வருவதால், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியவில்லை என்றால், அவருக்கு மாற்றாக அருண்குமார் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பேன் என்று சுஷீல் குமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியில் வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது. 3 பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. இதில், 7 எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு எடைப் பிரிவுக்கும் ஒரு வீரர் என்ற முறையில் 21 வீரர்கள் (மாற்று வீரருடன் சேர்த்து 22) அறிவிக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment